/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஸ் போட்டி; மாணவர்கள் ஆர்வம்
/
செஸ் போட்டி; மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜன 12, 2026 06:43 AM

திருப்பூர்: திருப்பூரில் மணி செஸ் பவுண்டேசன் கோப்பைக்கான செஸ் போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதன் மூன்றாவது ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி, மங்கலம் ரோடு ரமணாஸ் அரங்கில் நடைபெற்றது. மணி செஸ் பவுண்டேசன் நிறுவனர் கவுதமன் தலைமை வகித்தார். போட்டிகளை, சந்திரசேகர் துவக்கி வைத்தார்.
பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. இதில் ஓபன் பிரிவில், கோகுல் கிருஷ்ணா, கிேஷார், மாதவன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
ஒன்பது வயது பெண்கள் பிரிவில், ஆரதியா, லக்சயா, ரோக்சி ஆகியோர் வெற்றி ெபற்றனர். அதே போல் 12 வயது பிரிவில், யாழ்மொழி, லிவியா டாப்னி, நந்ததாரணி ஆகியோர் பரிசு பெற்றனர்.
மாணவர்கள் 9 வயது பிரிவில் ஆதிஷ், கவிமுகிலன், அஷ்வந்த் ஆகியோரும், 12 வயது பிரிவில், ரியான், வியாஸ் கிரித்திக், யுவின் வினய் ஆகியோரும் முதல் மூன்றிடங்கள் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பிரன்ட்லைன் பள்ளி தலைவர் சிவசாமி, பெங்குயின் கிளாத்திங் நிறுவனம் சின்னசாமி, மாவட்ட செஸ் அசோசியேசன் பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் பரிசளித்தனர்.

