sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு ;தொடர் நஷ்டத்தால் மாற்றம்

/

கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு ;தொடர் நஷ்டத்தால் மாற்றம்

கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு ;தொடர் நஷ்டத்தால் மாற்றம்

கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரிவு ;தொடர் நஷ்டத்தால் மாற்றம்


ADDED : அக் 21, 2025 08:10 PM

Google News

ADDED : அக் 21, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: நிலையான விலை கிடைக்காதது, விளைச்சல் சரிவு உள்ளிட்ட காரணங்களால், கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழை சீசனில், மேற்கொள்ளப்படும் மானாவாரி சாகுபடி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பகுதியிலுள்ள களிமண் நிலங்களில், இந்த சீசனில், கொண்டைக்கடலை, அதிக பரப்பில், சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கருப்பு சுண்டல் எனப்படுவது இவ்வகை கடலையே ஆகும்.

இச்சாகுபடிக்கு, விதைப்பின் போது மழை, செடியின் வளர்ச்சி தருணத்தில், பனிப்பொழிவு, பூ பிடிக்கும் தருணத்தில், கீழ்திசை காற்று என பருவ நிலையும் ஒத்து போவது அவசியமாகும். இவ்வாறு, பருவநிலை ஒத்துழைத்தால், ஏக்கருக்கு, 700 முதல் 800 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும்.

பிற பகுதிகளில், பெரும்பாலும், இவ்வகை கடலை விளைவது இல்லை. உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தின் பிரத்யேக சாகுபடியாக இருந்த, கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு, கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து விட்டது.

இந்தாண்டும், இவ்வகை சாகுபடியை தேடும் நிலை உருவாகி விட்டது. இருப்பினும், சில பகுதிகளில், கொண்டைக்கடலை விதைப்புக்காக, விளைநிலத்தை உழவு செய்து, தயார் நிலையில் வைத்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது:

கொண்டைக்கடலை முன்பு, 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், சாகுபடியாகி வந்தது. பருவநிலை மாற்றத்தால், செடிகளில், நோய்த்தாக்குதல் அதிகரித்து, ஆறுக்கும் அதிகமான முறை மருந்து தெளிக்க வேண்டிய நிலை உருவானது.

இதனால், சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்தது. மேலும், களையெடுத்தல் பணிக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை.

செடிகளில் ஒரு வகை, புளிப்புத்தன்மை இருக்கும் என்பதால், காலை, 9:00 மணிக்குள், அறுவடை செய்ய வேண்டும். இப்பணிக்கும் ஆட்கள் கிடைப்தில்லை.

இவ்வாறு, சாகுபடி முழுவதும் போராடினாலும், ஏக்கருக்கு, 300 கிலோ விளைச்சல் கிடைப்பதே அரிதாகி விட்டது. அறுவடையின் போது, இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால், விலையும் கிடைப்பதில்லை.

எனவே, ஒவ்வொரு ஆண்டும், கொண்டைக்கடலை சாகுபடியில், ஏக்கருக்கு, 10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால், பெரும்பாலான விவசாயிகள், சாகுபடியை கைவிட்டு விட்டனர். நடப்பாண்டும் குறைவான பரப்பிலேயே கொண்டைக்கடலை விதைப்பு செய்ய வாய்ப்புள்ளது. உடுமலை வட்டாரத்தில், கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு மீண்டும் அதிகரிக்க, வேளாண்துறை உதவ வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us