sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அறிவை செதுக்கும் உளிகள்!

/

அறிவை செதுக்கும் உளிகள்!

அறிவை செதுக்கும் உளிகள்!

அறிவை செதுக்கும் உளிகள்!


ADDED : பிப் 04, 2024 01:59 AM

Google News

ADDED : பிப் 04, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அப்பா... இவ்ளோ பெரிய புக்கா... எப்படி துாக்கறது'

சிறுவன் தந்தையிடம் கேட்கிறான்.

'அதை துாக்க முடியாதுடா' என்கிறார் தந்தை.

திருப்பூரில் வேலன் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவில், புத்தகம் விரித்துவைத்தாற்போல் தத்ரூபமாக 'செட்' அமைக்கப்பட்டிருந்தது.

அதில், 'படி... படி... படி... எந்த மொழியும் படி' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. நுாற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள், ஆயிரக்கணக்கான பதிப்பகங்களுடன், லட்சம் புத்தகங்கள் அரங்குகள் நிறைந்து காணப்பட்டது.

'அறிவை விரிவு செய்... எதையும் கேள்வி கேளுங்கள்' என்ற வாசகங்களுடன் ஆங்காங்கே தொங்கிய தோரணங்கள் இளைஞர்கள் உள்ளத்தை ஊக்கப்படுத்தியது.

ஆன்மீகம், அரசியல், கல்வி, ஜோதிடம், சினிமா, வரலாறு, சூழலியல், சமூக பொருளாதாரம், பண்பாடு, கலாசாரம், சிறார் இலக்கியம், சிறுகதை, நாவல், போட்டி தேர்வுகள், அறிவியல் என ஒவ்வொரு அரங்கிலும் அறிவை செதுக்க உளியாக புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன.






      Dinamalar
      Follow us