/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்
/
சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்
சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்
சித்திரை திருவோணம் கோலாகலம்: ஸ்ரீநடராஜருக்கு மஹா அபிேஷகம்
ADDED : ஏப் 21, 2025 11:15 PM

திருப்பூர்:
சித்திரை திருவோண நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர் மஹா அபிேஷகம் நடந்தது.
சிவாலயங்களில் உள்ள ஸ்ரீநடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறுமுறை அபிேஷகம் நடக்கிறது. சித்திரை - திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி -திருவாதிரை நட்சத்திரம், ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் என, ஆறு முறை மகா அபிேஷகம் நடக்கிறது.
சித்திரை திருவோண நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜப்பெருமான் - சிவகாமியம்மனுக்கு மஹா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேவாரம், திருவாசக பதிகங்கள் பாராயணம் செய்து வழிபட்டனர்.
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜப் பெருமான் - சிவகாமி அம்பாளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 32 வகை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது; பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.