sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வகுப்பறை ஒன்று வகுப்போ இரண்டு

/

வகுப்பறை ஒன்று வகுப்போ இரண்டு

வகுப்பறை ஒன்று வகுப்போ இரண்டு

வகுப்பறை ஒன்று வகுப்போ இரண்டு


ADDED : அக் 13, 2025 12:27 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 13வது வார்டு, சாமிநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நுாறு மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

ஒரு நிரந்தர ஆசிரியர் மற்றும் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால், ஒரு வகுப்பறையில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களும், மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு வகுப்பறையிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தனியொரு வகுப்பறையிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். இது மாணவர்களுக்கு இட நெருக்கடியையும், ஒரு வகுப்புக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது, மற்றொரு வகுப்பு மாணவர்களுக்கு இடையூறும் ஏற்படும் நிலை உள்ளது.

பள்ளி விளையாட்டு திடலில் கோவில், ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ளஅங்கன்வாடி மையத்தில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பழைய கட்டடத்தில் வகுப்பறை இயங்கி வருகிறது. புதிய கட்டடம் கட்ட போதிய இடவசதி இல்லை. பெற்றோர்கள் கூறுகையில், ''மாணவர் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது; போதிய ஆசிரியர்கள் நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us