/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மைப்பணியாளர் வருகை பதிவேடு ஆய்வு
/
துாய்மைப்பணியாளர் வருகை பதிவேடு ஆய்வு
ADDED : ஜூன் 29, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ' திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக அமித் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அலுவல்ரீதியான தகவல்களை பிரிவு வாரியான அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
நேற்று காலை கமிஷனர், தென்னம்பாளையத்தில் உள்ள நுண் உர உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளை அவர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, ஆலங்காட்டில் உள்ள சுகாதார பிரிவு அலுவலகத்தில், துாய்மைப் பணியாளர் வருகை பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
வீடுகளில் குப்பை தரம் பிரித்து வாங்கும் பணி ஆகியன ஆய்வு செய்யப்பட்டது.