ADDED : மே 29, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்,; வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், 74 பேர், 26 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
முதல் தரம் கிலோ, 215.99 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 124.99 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது. மொத்தம், 51 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.