/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் உடைத்து வழிபாடு: ஹிந்து முன்னணி அழைப்பு
/
தேங்காய் உடைத்து வழிபாடு: ஹிந்து முன்னணி அழைப்பு
ADDED : செப் 23, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : பல்லடத்தில், ஹிந்து முன்னணி நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
மேற்கு மாவட்ட செயலாளர்கள் லோகநாதன், சர்வேஸ்வரன் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், கோட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திருப்பதி லட்டு விவகா ரத்தில் தவறு செய்தவரை தண்டிக்க வலியுறுத்தி, 28ம் தேதி ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.