sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்

/

பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்

பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்

பக்தர்கள் பாதம் காக்க தேங்காய் நார் கம்பளம்


ADDED : மார் 31, 2025 07:14 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அடுத்த மாதப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, அஷ்டமி, பிரதோஷம் உள்ளிட்ட மாதாந்திர விஷேச நாட்களிலும் அதிகப்படியான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலை சுற்றி வரும் பக்தர்கள், கடும் வெப்பம் காரணமாக, காலை கீழே வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர். கோவிலை சுற்றி வர பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், தேங்காய் நார் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us