sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தோட்டக்கலைத்துறை சார்பில் பழச்செடி தொகுப்பு; ரூ. 50க்கு வினியோகம்

/

தோட்டக்கலைத்துறை சார்பில் பழச்செடி தொகுப்பு; ரூ. 50க்கு வினியோகம்

தோட்டக்கலைத்துறை சார்பில் பழச்செடி தொகுப்பு; ரூ. 50க்கு வினியோகம்

தோட்டக்கலைத்துறை சார்பில் பழச்செடி தொகுப்பு; ரூ. 50க்கு வினியோகம்


ADDED : செப் 20, 2024 10:12 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பழச்செடி தொகுப்புகள் தோட்டக்கலைத் துறை வாயிலாக வழங்கப்படுகிறது.

மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது:

மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள பொது மக்கள் பயன்பெறும் வகையில், பழச்செடி தொகுப்புகள் தோட்டக்கலை துறை வாயிலாக வினியோகிக்கப்படுகிறது.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்துக் குறைபாடுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து தன்னிறைவு மேம்பாடு அடைய பழச்செடி தொகுப்புகள், தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், சப்போட்டா, கொய்யா, பலா, எலுமிச்சை, பப்பாளி ஆகிய, ஐந்து வகையான பழச்செடிகள் வழங்கப்பட உள்ளன.

சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், குடல் புற்றுநோய் ஏற்படாது. கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இருப்பதால் எலும்புகள் வலுவடையும்.

கொய்யாப்பழம், கொய்யா இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பலா பலாப்பழத்தில் வைட்டமின் 'சி' அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை அதன் சுவைக்காகவும் அற்புதமான மருத்துவ குணங்களுக்காகவும் தனித்து விளங்குகிறது.

சிறுநீரக கற்களை தடுக்கின்றன. பப்பாளி, சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், நரம்புகள் பலப்படவும், ரத்த விருத்திக்கும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் பப்பாளி ஒரு சிறந்த பழமாகும்.

இந்த செடிகளை நடும்போது, குழி எடுத்து அதற்குள், சிறிதளவு வேப்பம் புண்ணாக்கு, தொழு உரம் இட்டு நட வேண்டும்.

அனைத்து கிராம வேளாண் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பாப்பான்குளம், கொழுமம் ஆகிய கிராமங்களுக்கு, 405 பழச் செடி தொகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ.200; தொகுப்பு ஒன்றுக்கு, 75 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், மாநில அரசு, ரூ.150 மானியமாக வழங்குகிறது. பயனாளிகள், 25 சதவீதம், ரூ.50க்கு, பழச்செடிகள் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

இதனை வீட்டு தோட்டங்கள், விவசாய நிலங்களிலும் நடவு செய்யலாம். தேவைப்படுபவர்கள், ஆதார் நகல் மட்டும் கொடுத்து, பாப்பான்குளம், கொழுமம் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன், 96598 38787, பூவிகா தேவி, 80720 09226, பபிதா, 85250 25540 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us