/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமுதா பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
/
குமுதா பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஜூலை 16, 2025 11:28 PM

திருப்பூர்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவில் தமிழ்நாடு நாள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
மாவட்டம் முழுதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்ட இப்போட்டியில், குமுதா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி மஹன்யா பங்கேற்று, மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றார். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவியை ஈரோடு கலெக்டர் கந்தசாமி பாராட்டி சான்றிதழ், பரிசுத்தொகை, 5,000 ரூபாய் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ, பள்ளித் தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்திஜனகரத்தினம், பள்ளி செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினிஅரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளியின் முதல்வர் மஞ்சுளா மற்றும் பெற்றோர் பலர் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினர்.