sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரப்புகளில் வண்ண சேலை தடுப்பு

/

வரப்புகளில் வண்ண சேலை தடுப்பு

வரப்புகளில் வண்ண சேலை தடுப்பு

வரப்புகளில் வண்ண சேலை தடுப்பு


ADDED : மே 14, 2025 11:35 PM

Google News

ADDED : மே 14, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பெரியகுளம் பகுதியில், காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாழை சாகுபடியை பாதுகாக்க, வரப்புகளில் சேலை கட்டும் நடைமுறையை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.

உடுமலை அருகே வடபூதனம், பெரியகுளம், வாளவாடி பிரிவு சுற்றுப்பகுதிகளில், கரும்பு, வாழை மற்றும் காய்கறி சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.

சமீபகாலமாக, பெரியகுளம் பகுதியிலும், ஓடைகளுக்கும் இடம் பெயர்ந்துள்ள காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில், விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.

காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்கும் வராமல் இருக்க வரப்புகளில், வண்ணச்சேலைகளை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: வாழை சாகுபடிக்கு அதிக செலவு பிடிக்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து செவ்வாழை, கதளி, ரஸ்தாளி உள்ளிட்ட ரக வாழை கன்றுகளை தருவித்து நடவு செய்துள்ளோம்.

தற்போது வாழைக்கன்றுகள் வளர்ந்து வரும் நிலையில், காட்டுப்பன்றிகள் அவற்றை சேதப்படுத்துகின்றன. மீண்டும் வாழை கன்று நடவு செய்ய அதிக செலவாகிறது. வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us