sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வண்ண மாத்திரை மிட்டாய்கள்; குழந்தைகள் உடல் நலனுக்கு கேடு

/

வண்ண மாத்திரை மிட்டாய்கள்; குழந்தைகள் உடல் நலனுக்கு கேடு

வண்ண மாத்திரை மிட்டாய்கள்; குழந்தைகள் உடல் நலனுக்கு கேடு

வண்ண மாத்திரை மிட்டாய்கள்; குழந்தைகள் உடல் நலனுக்கு கேடு

1


ADDED : ஜூலை 08, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 06:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: சில மாதங்கள் முன், ஊசி வடிவ போதை சாக்லேட்கள் விற்பனை, தமிழகம் முழுவதும் விற்பனையானது. அதை கண்ட 'தினமலர்' நாளிதழ், தடை செய்ய கோரியது. ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஊசி வடிவ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர். தற்போது, மாத்திரை வடிவிலான பல்வேறு வண்ணங்களிலான மிட்டாய்கள், அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனையாகும் இந்த மிட்டாய்கள், பெரியவர்கள் சாப்பிடும் மாத்திரைகள் போல இருப்பதால், மாத்திரைகளை குழந்தைகள் சாப்பிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விதிகளின் படி தயாரிக்கப்படாத இந்த மிட்டாய்கள், உடலுக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவையாகவும் உள்ளன.

பல்லடம் தாலுகா உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டத்தின்படி, உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்வதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி தான் அவற்றை பேக்கிங் செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து சான்று பெற்று இங்கு விற்பனைக்கு வரும் உணவு பொருட்களை விற்பனை செய்யும் டீலர்கள், ஏஜன்சிகள் உரிய முன் அனுமதி பெற வேண்டும். விதிமுறைப்படி தயாரிக்காத, உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மிட்டாய்களை பறிமுதல் செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us