sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'

/

'மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'

'மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'

'மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'


ADDED : பிப் 08, 2025 06:33 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டுறவு அணி சார்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

மக்காக்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் தென்படுகிறது. ஒரு பக்கம் மழை, மறுபக்கம் பனி என பல்வேறு காரணங்களால், மக்காச் சோள மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் உர விலை, தொழிலாளர் பற்றாக்குறை, மருந்துகள் விலை உயர்வு போன்ற காரணங்களால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுாறு நாள் திட்டப் பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. விவசாயிகளால் வாங்கிய பயிர்க்கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. வங்கிக் கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலையுள்ளது. தமிழக அரசு, மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மத்திய அரசு, மக்காச்சோளத்துக்கு, ஒரு சதவீதம் செஸ் வரி விதிப்பதால், மக்காச்சோளம் விற்பனை கடுமையாக பாதிக்கும். செஸ் வரியை திரும்பப் பெற, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

பயிர்க்காப்பீடுக்கான இழப்பீடு தொகையையும், காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.






      Dinamalar
      Follow us