/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் சேர்க்கை வயது வரம்பில் குழப்பம்: பெற்றோர் தயக்கம்
/
மாணவர் சேர்க்கை வயது வரம்பில் குழப்பம்: பெற்றோர் தயக்கம்
மாணவர் சேர்க்கை வயது வரம்பில் குழப்பம்: பெற்றோர் தயக்கம்
மாணவர் சேர்க்கை வயது வரம்பில் குழப்பம்: பெற்றோர் தயக்கம்
ADDED : மார் 04, 2024 11:49 PM
உடுமலை:அரசுப்பள்ளிகளில் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு பெற்றோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அரசு, கடந்த கல்வியாண்டு இறுதியில், புதிய கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க, ஆறு வயது நிரம்பி இருக்க வேண்டுமென அறிவுறுத்தியது.
இருப்பினும் அதிகாரப்பூர்மான அறிவிப்பு இல்லாததால், மாநில அரசு பள்ளிகளில் சேர்க்கை வழக்கமான முறையில் தொடர்ந்தது. நடப்பாண்டிலும், மத்திய அரசு மாணவர்களின் சேர்க்கைக்கான வயது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழக அரசுப்பள்ளிகளில், புதிய கல்வியாண்டு 2024 - 25க்கான சேர்க்கை துவங்கியுள்ளது. வயது வரம்பு குறித்து, எந்த அறிவிப்பும் பள்ளிக்கல்விதுறையின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதனால், அங்கன்வாடிகளில் முன்பருவ கல்வி முடித்த குழந்தைகள், நேரடியாக பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், பல பெற்றோர் குழந்தைகளுக்கு ஐந்து வயது நிரம்பி இருந்தாலும், சேர்க்கையை உறுதிசெய்வதற்கு, அரசு பள்ளிகளில் தயங்குகின்றனர். இதனால் சேர்க்கையில் சிக்கல் ஏற்படும் என, பள்ளி நிர்வாகத்தினரும் அதிருப்தியில் உள்ளனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
கல்வியாண்டு இறுதியாகி விட்டதால், சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல குழந்தைகள் 4, 5வயது நிரம்பியவர்களாக பள்ளியில் சேர்ப்பதற்கான நிலையில் உள்ளனர்.
ஆனால் மத்திய அரசின் அறிவிப்பை கூறி பெற்றோர் தயங்குகின்றனர். வயது வரம்பில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதை அங்கன்வாடி மையத்தில் சேர்ப்பது முதலே துவங்க வேண்டும்.
ஆனால் அதற்கான எந்த அறிவிப்புகளும் இல்லை. அங்கன்வாடி மையங்களில் ஐந்து வயது வரை குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். அதன் பின்தான் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இவ்வாறு ஒரு கல்வியாண்டிலும், வயது வரம்பில் குழப்பம் ஏற்படுவது சேர்க்கையில்தான் தாமதமாகிறது. பெற்றோரை தெளிவுபடுத்த, மாநில பள்ளிக்கல்வித்துறை முறையான அறிவிப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

