ADDED : ஆக 14, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ; திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், குமரன் சிலை முன், மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்., மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மத்திய அரசு வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

