sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை

/

வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை

வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை

வீடு கட்டி தருவதில் கட்டுமான நிறுவனம் மோசடி உரிமையாளர் தற்கொலை


ADDED : நவ 10, 2025 11:46 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், வீடு கட்டித்தருவதில் மோசடி செய்ததால், மனமுடைந்தவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை ஜி.டி.வி., லே அவுட்டைச்சேர்ந்தவர் சந்திரசேகரன், 55. அவரது மனைவி காந்திமதி. மகன் பிரதீப் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

சந்திரசேகரன், ஜி.டி.வி.,லே - அவுட்டிலுள்ள தனக்கு சொந்தமான, 8 சென்ட் இடத்தில், பழைய வீட்டை இடித்து விட்டு, புதிதாக, 2,800 சதுர அடியில் வீடு கட்டித்தருமாறு, குருவாயூரப்பன் பில்டர்ஸ் உரிமையாளர் சிவவிஷ்ணு சிங் மற்றும் அவரது சகோதரர் ஹர்பான் சிங் ஆகியோரிடம் ஒப்பந்தமிட்டுள்ளார்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில், ஒப்பந்தப்படி ஆறு மாதத்தில் வீடு கட்டி தராமல் இழுத்தடித்துள்ளனர். கடந்த ஏப்., மாதம் கேட்ட போது, 40 நாட்களுக்குள் முடித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

ரூ. 55.16 லட்சத்திற்கு ஒப்பந்தமிட்ட நிலையில், 54 லட்சம் வரை கட்டுமான நிறுவனத்தினர் வசூல் செய்ததோடு, 15 மாதமாகியும் கட்டித்தராமல், தரமற்ற முறையில் பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர், தனக்கு தெரிந்த பெயின்டரிடம் புலம்பிய நிலையில், குருவாயூரப்பன் பில்டர்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த சந்திரசேகரன், கடிதம் எழுதிவைத்து விட்டு, தனக்காக கட்டி வரும் வீட்டிலேயே, துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us