sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டி முடித்த மூன்றே நாளில் விரிசல் விழுந்த கட்டுமானம்; இப்படியும் ஒரு 'தரம்'

/

கட்டி முடித்த மூன்றே நாளில் விரிசல் விழுந்த கட்டுமானம்; இப்படியும் ஒரு 'தரம்'

கட்டி முடித்த மூன்றே நாளில் விரிசல் விழுந்த கட்டுமானம்; இப்படியும் ஒரு 'தரம்'

கட்டி முடித்த மூன்றே நாளில் விரிசல் விழுந்த கட்டுமானம்; இப்படியும் ஒரு 'தரம்'


ADDED : மார் 09, 2024 07:56 AM

Google News

ADDED : மார் 09, 2024 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், : பல்லடம் நகராட்சியில், கட்டி முடிந்த மூன்றே நாளில், கட்டடத்தில் விரிசல் விழுந்ததை தொடர்ந்து, கட்டுமானத்தின் உறுதி தன்மை வெளிப்பட்டுள்ளது.

பல்லடம் நகராட்சி, 6வது வார்டுக்கு உட்பட்ட ராயர்பாளையம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு தண்ணீர் டேங்க் வைப்பதற்கான மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது.

மேடை கட்டப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், கட்டுமான தொழிலாளர்கள், தண்ணீர் டேங்க்கை மேலே ஏற்றி வைத்து தண்ணீர் நிரம்பி சோதனை செய்தனர்.

இதில், பாரம் தாங்காமல் மேடையில் விரிசல் ஏற்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாட்களில் மேடையில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, கட்டுமானத்தில் எந்த அளவு 'உறுதி' தன்மை உள்ளது என்பது வெளிப்பட்டு உள்ளது.

இதையடுத்து, மீண்டும் தண்ணீர் டேங்கை கீழே இறக்கி வைத்து விட்டு, மேடையில் ஒட்டு வேலை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட துவங்கினர். அதிர்ஷ்டவசமாக, கட்டும் போதே இதன் உறுதித் தன்மை வெளிப்பட்டதால், பெரும் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மேடையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us