sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டட தொழிலாளி குத்திக்கொலை; மனைவி உட்பட 5 பேருக்கு 'ஆயுள்'

/

கட்டட தொழிலாளி குத்திக்கொலை; மனைவி உட்பட 5 பேருக்கு 'ஆயுள்'

கட்டட தொழிலாளி குத்திக்கொலை; மனைவி உட்பட 5 பேருக்கு 'ஆயுள்'

கட்டட தொழிலாளி குத்திக்கொலை; மனைவி உட்பட 5 பேருக்கு 'ஆயுள்'


ADDED : ஜன 07, 2024 12:31 AM

Google News

ADDED : ஜன 07, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;குடும்ப தகராறில் கட்டட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி, மாமியார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திண்டுக்கல், வடமதுரையைச் சேர்ந்தவர் ராஜகாளீஸ்வரன், 23. கட்டட தொழிலாளி. இவருக்கும் திருப்பூர் எம்.எஸ். நகரை சேர்ந்த செண்பக ராஜ் மகள் ஜனனிக்கும், 2019ல் திருமணம் நடந்தது. தம்பதியர் கூத்தம்பாளையத்தில் வசித்து வந்தனர்.

தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால், ஜனனி அடிக்கடி தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார். கடந்த 2020, நவ., மாதம் அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். பல முறை அழைத்தும் அவர் திரும்ப வரவில்லை.

கடந்த 2020, நவ., 15ல், அவர் வீட்டுக்கு வந்த போது, ஜனனி, 19, அவரது தாய் ஜோதி, 45, சகோதரர்கள் மணிகண்டன், 23, பிரசாந்த்,21 மற்றும் உறவினர் பரத், 22 ஆகியோர், ராஜகாளீஸ்வரனை தாக்கியும், கத்தியால் குத்தியும் தப்பினர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகாளீஸ்வரன் உயிரிழந்தார். அனுப்பர்பாளையம் போலீசார், 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில், கொலையில் ஈடுபட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்புக்குப் பின் ஐந்து பேரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு தரப்பில், அரசு குற்றப்பிரிவு வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us