sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூட்டாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு: கடக்க போராடும் மக்கள்

/

கூட்டாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு: கடக்க போராடும் மக்கள்

கூட்டாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு: கடக்க போராடும் மக்கள்

கூட்டாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு: கடக்க போராடும் மக்கள்


ADDED : டிச 23, 2024 10:12 PM

Google News

ADDED : டிச 23, 2024 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மழைக்குப்பிறகு கூட்டாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு இருப்பதால், ஆற்றை கடந்து வர வழியில்லாமல், தளிஞ்சி மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை, தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்திற்குட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு.

இக்குடியிருப்பில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், தேனாற்றில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், மலைவாழ் மக்கள், நெல், பீன்ஸ், மொச்சை உட்பட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

தங்கள் வாழ்வாதாரமாக உள்ள, விவசாய சாகுபடியில் கிடைக்கும், விளைபொருட்களை சந்தைப்படுத்த, வழித்தடம் இல்லாமல், வேதனையில் உள்ளனர்.

சமவெளிப்பகுதியான உடுமலை - மூணாறு ரோட்டிற்கு வர, கரடுமுரடான, பாறைகள் நிறைந்த, 6 கி.மீ., துாரத்திற்கான வழித்தடம் மட்டுமே உள்ளது.

இந்த வழித்தடத்தில் குறுக்கிடும் கூட்டாற்றில், தண்ணீர் அதிகரித்தால், சமவெளிப்பகுதிக்கு வர முடியாமல், மீண்டும் குடியிருப்பிற்கு சென்று, அங்கிருந்து பல கி.மீ., துாரம் சுற்றி, சம்பக்காடு வழியாக சமவெளிக்கு வர வேண்டிய அவல நிலை உள்ளது.

மருத்துவ தேவைக்காகவும், இந்த வழித்தடத்தையே மலைவாழ் மக்கள் நம்பியுள்ளனர். அவசர சிகிச்சைக்கு வரும் போது, கூட்டாற்றை கடக்க பரிசலை அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தண்ணீர் வரத்து அதிகரித்தால், பரிசலையும் பயன்படுத்த முடியாது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு கூட்டாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு இருப்பதால், ஆற்றை கடக்க மக்கள் திணறி வருகின்றனர்.

மலைவாழ் கிராம மக்கள் கூறியதாவது: தளிஞ்சியில் விளையும் விளைபொருட்களை, தலைச்சுமையாக சுமந்து சந்தைப்படுத்த எடுத்து வருகிறோம். ஆனால், கூட்டாற்றை கடப்பதில், அபாயம் உள்ளது.

எனவே கூட்டாற்றில் பாலம் அமைத்துக்கொடுத்தால், விளைபொருட்களை எளிதாக எடுத்துச்செல்வதுடன், அவசர சிகிச்சைக்கு செல்வோருக்கும் பயனளிப்பதாக இருக்கும். இது குறித்து, அரசுக்கு தொடர் மனு அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு, மலைவாழ் கிராம மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us