/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
14ம் தேதி கூட்டுறவு குறைதீர் முகாம்
/
14ம் தேதி கூட்டுறவு குறைதீர் முகாம்
ADDED : நவ 12, 2025 07:59 AM
திருப்பூர்: திருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர் முகாம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் நலன் கருதி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அடுத்த முகாம் வரும், 14ம் தேதி காலை, 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நான்காம் தளத்தில் அறை எண்: 407ல் உள்ள திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில் திருப்பூர் மண்டல கூட்டுறவு நிறுவனங்களில் தற்போது பணிபுரியும், ஓய்வுபெற்ற, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கலாம். உரிய விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

