ADDED : மார் 31, 2025 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் ; திருப்பூர் செட்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், தலைமை வகித்தார். கவுன்சிலர் தனலட்சுமி, முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தரணி, வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, ஏ.வி.பி., பள்ளி மேலாளர் ராமசாமி, பிரணவ் பனியன் நிறுவன உரிமையாளர் ஜெயசந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.