ADDED : பிப் 20, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி, 44வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், மேயர் தினேஷ்குமாரிடம் அளித்த மனு: பெரிய கடை வீதி, முகமதியர் வீதி, டிமாண்ட் வீதி உள்ளிட்ட வீதிகளில் 4வது குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இதற்கு தோண்டிய குழிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம் 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும். தேவையான இடங்களில் தெரு விளக்குகள் பொருத்துதல்; சேதமான ரோடுகள் சீரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரமலான் பண்டிகை காலம் துவங்கவுள்ளதால் இப்பணிகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும்.