sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்

/

எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்

எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்

எட்டிப்பார்க்காத ஒப்பந்த நிறுவனத்தினர் கவுன்சிலர்கள் கோபம்


ADDED : அக் 26, 2025 03:06 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணியில், ஒப்பந்த நிறுவனத்தினர் கட்டாயம் மன்ற கூட்டத்துக்கு வர வேண்டும்'' என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை பிரச்னையில், கோர்ட் அறிவுறுத்தலின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த சிறப்பு மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடந்தது.

கூட்டத்தை துவங்கி வைத்த மேயர் தினேஷ்குமார், மண்டல குழு தலைவர்கள் கருத்துகளை கேட்டார். மண்டல தலைவர்கள் ஒரே வார்த்தையில் ஆமோதித்தனர்.

பின் கவுன்சிலர்கள் பேசியதாவது:

கண்காணிக்க வேண்டும் n ரவிச்சந்திரன், இ.கம்யூ.,: எத்தனை விதிமுறைகளை ஏற்படுத்தினாலும் ஒப்பந்த நிறுவனம் திருந்தாது. அவர்கள் செய்த தவறால் இன்று சட்டத்தின் பிடியில் நாம் சிக்கிக் கொண்டோம்.

அந்நிறுவனத்தினர் மன்ற கூட்டத்தில் பங்கேற்று, விதிமுறைகளை ஏற்று செயல்படுவதாக உறுதியளிக்க வேண்டும். கடுமையாக அதைப் பின்பற்றுவது கண்காணிக்க வேண்டும்.

n குணசேகரன், பா.ஜ.,: குப்பை அகற்றும் பணியில் மேற்பார்வையாளர்கள் இல்லை. இதனால் உரிய கண்காணிப்பு இல்லை. சாக்கடை துார் வாரி கழிவுகள் ரோட்டோரம் கொட்டப்படுகிறது. அது அகற்றுவதில்லை. மீண்டும் சாக்கடைக்குள் சென்று விடுகிறது. செகண்டரி பாய்ண்ட் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

எப்போது தீரப் போகிறது? n சாந்தாமணி, ம.தி.மு.க.,: சாக்கடை முழுமையாக துார் வார வேண்டும். பணியாளர்கள், உபகரணங்கள் உரிய எண்ணிக்கையில் வேண்டும். குப்பை அகற்ற ஆட்டோக்கள் போதாது; டிராக்டர் கட்டாயம் வேண்டும். தற்போதுள்ள நிலையில் பணியாற்றினால், எந்த ஜென்மத்திலும் குப்பை பிரச்னை தீராது. திடமான ஆண் பணியாளர்கள் அதிகளவில் நியமிக்க வேண்டும்.

n செந்தில்குமார், காங்.,: சுகாதார பிரிவில் எவ்வளவு அலுவலர்கள் உள்ளனர் எனத் தெரிய வேண்டும். நகரின் தேவைக்கேற்ப அலுவலர், ஊழியர்களை கேட்டுப் பெற வேண்டும். அவர்கள் முறையாக திடக்கழிவு மேலாண்மையை கவனிக்க வேண்டும்.

திறன் மிக்க அலுவலர்கள் பணியமர்த்தி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். புதிய குப்பை வரி விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த கூட்டத்தில் குறிப்பிட்டும் இந்த தவறு மீண்டும் ஏற்படுகிறது.

நிபந்தனை கடைபிடிக்கணும் n மணிமேகலை, மா.கம்யூ.,: குப்பை அகற்றும் நிறுவனம் அனைத்து நிபந்தனைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். நிறுவனம் அதை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

n செல்வராஜ், இ.கம்யூ.,: பல பகுதிகளில் இறைச்சி கழிவுகள் ரோட்டிலும், குப்பையிலும் வீசப்படுகிறது. இறைச்சி கடைகளை முறைப்படுத்த வேண்டும். உரிமம் வழங்கி கணக்கெடுத்தால் மட்டுமே இறைச்சி கழிவுகள் முறையாக கையாளுவதை உறுதிப்படுத்த முடியும். தொழிற்சாலைகளில் கழிவுகள் அகற்றுவதற்கு எந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனத் தெரிய வேண்டும்.

சட்டப்பாதுகாப்பு வேண்டும் n காந்திமதி, தி.மு.க.,: எனது 58வது வார்டுக்கு உட்பட்ட ஆதி திராவிடர் காலனியில் ஆக்கிரமிப்பு அகற்றி ரோடு அமைக்கப்பட்டது. ஆனால், தனி நபர் ஒருவர் அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி, எனது கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், தனது பின்புலத்தைப் பயன்படுத்தி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும் என போலீசாரை வலியுறுத்தியுள்ளார். பொது மக்களுக்கான பணிக்கு முன் நிற்பதால் இது போல் நடக்கிறது. சட்டப் பாதுகாப்பு வேண்டும். அதிகாரிகள் மீதும் புகார் அளிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் பங்கேற்பது கட்டாயம் கவுன்சிலர்கள் பேசிய பின், மேயர் தினேஷ்குமார் பேசியதாவது: அடுத்த கூட்டத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை பணியில் அலுவலர்கள் உரிய ஒத்துழைப்பு தர வேண்டும். பல்க் வேஸ்ட் உற்பத்தியாளர் குப்பை வரி விதிப்பில் உள்ள குளறுபடிக்கு தீர்வு காணப்படும். மேலும், 58 வது வார்டு பிரச்னையில், நிர்வாகத் தரப்பில், பிரச்னைக்குரிய இடம் குறித்த ஆவணங்கள் சேகரித்து, கள ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சட்டப் பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். சாக்கடை கால்வாய் துார் வாருவது குறித்து கவுன்சிலர்கள், சுகாதார பிரிவினர், பொறியியல் பிரிவினர் இணைந்து அனைத்து வார்டுகளிலும், இப்பணி மேற்கொள்ள வேண்டிய சாக்கடை கால்வாய்கள் அளவு, ஆழம் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். அதனடிப்படையில் அப்பணிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, ஆட்கள் நியமித்து பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:கடந்த பதவிக்காலத்தில் தனியார் நிறுவனம் இரண்டு மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைக்கு ஒப்பந்தம் எடுத்தது முதலே அவர்கள் பணி சரியில்லை என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இன்று வரை இது தொடர்கிறது. மன்ற கூட்டத்தில், ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக ரீதியான அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். எந்தப் பயனும் இல்லை. இன்று மாநகராட்சியில் எழுந்துள்ள குப்பை பிரச்னைக்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்தின் பணிகள் தான். இதன் ஒப்பந்தமே ரத்து செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய சூழல் அதற்கு இடம் தரவில்லை. அடுத்த கூட்டத்தில் அதன் உயர் மட்ட அலுவலர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் அதை உறுதிப்படுத்த வேண்டும். பல்க் வேஸ்ட் உற்பத்தியாளர் நிலை என்ன என விளக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் ஒப்பந்த நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது. மாநகராட்சியும் குப்பை வரி விதிக்கிறது. இது என்ன நடைமுறை என விளக்க வேண்டும். பல்க் வேஸ்ட் அகற்ற தனி டெண்டர் விட வேண்டும். இறைச்சி, மீன் கழிவுகளுக்கு தனி வாகனம் இயக்க வேண்டும். நகரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் ஆய்வு செய்து உரிமம் கட்டாயமாக்க வேண்டும். அங்கு கழிவுகள் கையாளுவது கண்காணிக்க வேண்டும். இறைச்சி கழிவுகள் குப்பையோடு சேர்ந்து போவது பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.








      Dinamalar
      Follow us