/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவியை தாக்கிய கணவருக்கு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்
/
மனைவியை தாக்கிய கணவருக்கு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்
மனைவியை தாக்கிய கணவருக்கு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்
மனைவியை தாக்கிய கணவருக்கு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்
ADDED : ஜூன் 26, 2025 11:54 PM
திருப்பூர்; பூலுவப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 53. கடந்த 2015-ம் ஆண்டு தனது மனைவியை தகாத வார்த்தையில் பேசி, தாக்கினார். மனைவி அளித்த புகாரின் பேரில், அனுப்பர்பாளையம் போலீசார் பெண் வன்கொடுமை குற்றத்தில் வழக்குபதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு, ஜே.எம்., 3 கோர்ட், முருகேசனுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து, திருப்பூர் சிறப்பு கோர்ட்டில் முருகேசன் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், முருகேசனின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, கீழமை கோர்ட் வழங்கிய, 3 மாத சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.