ADDED : அக் 24, 2024 11:59 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் : தீபாவளி பண்டிகையொட்டி மாவட்டத்தில், 372 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.
மாநகரில் முதல்கட்டமாக, 66 கடைகளுக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். புறநகரில், 141 கடைகளுக்கு அனுமதி வழங்கி, கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்துள்ளார். இன்னமும், 70 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்ய காத்திருப்பில் உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை, 207 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல், ஒரு வாரத்துக்கு அனுமதி என, போலீசார் தெரிவித்தனர்.
