sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வலைவிரித்து காத்திருக்கும் சைபர் மோசடி கும்பல்கள்

/

வலைவிரித்து காத்திருக்கும் சைபர் மோசடி கும்பல்கள்

வலைவிரித்து காத்திருக்கும் சைபர் மோசடி கும்பல்கள்

வலைவிரித்து காத்திருக்கும் சைபர் மோசடி கும்பல்கள்


ADDED : ஆக 10, 2025 10:46 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஆன்லைன் மோடிகள் தொடர்பாக பலவகையில் போலீஸ் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அன்றாடம் ஏதாவது ஒரு பகுதியில் மக்கள் தங்கள் அறியாமை காரணமாக ஏமாற்றம் அடைகின்றனர்.

ஓட்டல், உணவு, மேப் ரிவ்யூ போன்றவற்றுக்கு ரேட்டிங் கொடுத்து, அதிக 'டாஸ்க்' முடிப்பவர்களுக்கு அதிக கமிஷன்; பங்கு சந்தைகளில் முதலீடு; பார்ட் டைம் பணி என, விதவிதமாக பொய்களை கூறி மக்களை நம்பவைத்து சைபர் கிரைம் மோசடிகள் நடக்கின்றன. படித்தவர்கள், படிக்காதவர்கள் என, எவ்வித பேதமுமின்றி, பேராசை, அறியாமை என, இரண்டையும் பயன்படுத்தி மோசடி கும்பல்கள் கைவரிசை காட்டுகின்றன. திருப்பூரில் மோசடிக்கும்பல்களிடம் ஏமாறுவோர் அதிகம்.

மொபைல் போன்கள், சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான விளம்பரம், வங்கியில் இருந்து அறிவிப்பு என்று ஏ.பி.கே., பைல் போன்றவற்றுக்கு 'லிங்க்'கை பகிர்கின்றனர். அதற்குள் சென்று டவுன்லோடு கொடுத்து அல்லது 'லிங்க்'கிற்குள் சென்றால் உடனடியாக மொபைல் போன் 'ஹேக்' செய்யப்பட்டு, மொபைல் போனில் உள்ள அனைத்து விபரங்களையும் திருடி, பணத்தை சுருட்டி விடுகின்றனர்.

''ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக, தெரியாத நபர்களுக்கு தங்கள் அடையாள ஆவணங்கள், விபரங்களை பகிர வேண்டாம்'' என்று போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் தங்கள் பேராசையால் ஏமாந்து விட்டு, புகார் அளிக்க வருவது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

பணத்தை இழப்போரே வழக்கிலும் சிக்கும் அவலம் பணத்தை இழக்கும் அப்பாவி நபர்களை, மோசடி நபர்களாக போலீசில் சிக்க வைக்கும் அளவுக்கு சைபர் மோசடிக் கும்பல்களின் கைவரிசை அமைகிறது. இதை முழுமையாக தவிர்க்க, மொபைல் போன், சமூக வலைதள கணக்கில் வரும் தேவையற்ற லிங்க் பதிவுகளை தவிர்க்க வேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். முகம் அறியாத நபர்களிடம், எவ்விதமான அடையாள ஆவணங்கள், வங்கி விபரங்களை பகிரக் கூடாது. குறிப்பாக, தங்கள்பொருளாதாரம் குறித்த தகவல்களை தெரிவிக்க கூடாது. சிலர் அறியாமையால் இன்னும் சிலர் தவறுகளை செய்கின்றனர். சொற்ப ஆயிரங்களுக்காக வங்கி கணக்கு துவக்கம், சிம் கார்டு வாங்கி தருவது போன்றவற்றில் ஈடுபடுவது கூடாது. இதுபோன்ற விஷயம், பின்னாளில் தங்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும். தங்கள் விபரங்களை பகிர வேண்டாம். முதலீடு தொடர்பாக, தெரியாத வெப்சைட், வாட்ஸ்ஆப் குழுக்களில் ஏமாற வேண்டாம். விழிப்போடு இருங்கள். - 'சைபர் கிரைம்' போலீசார்.








      Dinamalar
      Follow us