/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
இருள் நிறைகிறது; அச்சம் சூழ்கிறது
/
இருள் நிறைகிறது; அச்சம் சூழ்கிறது
ADDED : செப் 07, 2025 10:38 PM

ஒளிராத விளக்கு
பெருமாநல்லுார், பொடாரம்பாளையம், மகாபுரி கார்டனில் கடந்த 20 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. மக்கள் இரவில் நடமாட சிரமப்படுகின்றனர்.
- குமார், பெருமாநல்லுார்.
மில்லர் பஸ் ஸ்டாப்பில் இருந்து புஷ்பா சந்திப்பு வரை இரவில் தெருவிளக்கு எரியவில்லை.
- ராஜா, பெருமாநல்லுார்.
ரோடு படுமோசம்
லட்சுமி நகர் சூர்யா வீதி ரோடு குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது. தார் ரோடு அமைத்து தர வேண்டும்.
- திலீப், லட்சுமி நகர்.
வீணாகும் குடிநீர்
அவிநாசி, மெயின் ரோடு, கருணாம்பிகை ஹார்டுவேர்ஸ் எதிரில் கடந்த ஒரு வாரமாக குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
- பொன்னுசாமி, அவிநாசி.
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பயணிகள் வசதிக்காக நிழற்கூரை அமைக்க வேண்டும்.
- செல்வராஜ், மீனாம்பாறை
கால்வாய் அடைப்பு
தென்னம்பாளையம் பள்ளி வீதியில் பல மாதங்களாக சாக்கடை கழிவு அகற்றப்படாமல், கழிவுகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
- காயத்ரி, தென்னம்பாளையம்.
விபத்து அபாயம்
தென்னம்பாளையத்தில் இருந்து ஏ.பி.டி., ரோடு செல்லும் பகுதியில் நடுரோட்டில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. விபத்து அபாயம் உள்ளது.
- வாசுதேவன், திருப்பூர்.
தொங்கும் விளக்கு
கொடுவாய் மகரிஷி நகரில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தெருவிளக்கு உடைந்து விழும் நிலையில் தொங்கிக்கொண்டுள்ளது.
- தாமு, கொடுவாய்.
ரியாக் ஷன்
குப்பை அகற்றம்
வீரபாண்டி - கல்லாங்காடு ரோட்டில் தேக்கி வைக்கப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு, குப்பை தொட்டி வைக்கப்பட்டது.
- சிதம்பரகுமார், வீரபாண்டி.
ரோடு சீரமைப்பு
திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய ரோடு சீரமைக்கப்பட்டது.
- வின்சென்ட் ராஜ், ராயபுரம்.