/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு
/
லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு
லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு
லேப்டாப் வழங்க தாமதம்; விழாவில் 4 மணி நேரம் மாணவர்கள் காத்திருப்பு
ADDED : ஜன 06, 2026 08:48 AM
தாராபுரம்: தாராபுரத்தில், லேப்-டாப் வழங்க, நான்கு மணி நேரமாக மாணவ, மாணவியரை அதிகாரிகள் காத்திருக்க வைத்தனர்.
'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதையொட்டி, தாராபுரம், மூலனுார், கரையூரில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்று வழங்கினார். மாவட்டம் முழுதும், ஆயிரத்து, 441 பேருக்கு லேப்-டாப் வழங்கப்பட்டது.
லேப்-டாப் வழங்க உடுமலை, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுதும் அரசு கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து வந்து அரங்கில் அமர வைத்தனர். சென்னையில் முதல்வர் லேப்-டாப் வழங்கிய பின், வழங்க இருந்தனர். சென்னையில் விழா தாமதமான காரணத்தால், மாணவ, மாணவியர் நான்கு மணி நேரமாக காத்திருந்தனர். இதனால், வெறுப்படைந்த மாணவ, மாணவியர் நிகழ்ச்சி நடக்கும் போதே, கூட்டம், கூட்டமாக வெளியே செல்வதும், திரும்பி வருவதுமாக இருந்தனர்.

