sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு

/

மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு

மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு

மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு நவீன 'ப்ளூரோஸ்கோபி' கருவி தருவிப்பு


ADDED : நவ 11, 2025 10:34 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர் -

உடலின் உள் உறுப்புகளின் இயக்கத்தை துல்லியமாக காட்டும் நவீன 'ப்ளூரோஸ்கோபி' எக்ஸ்ரே கருவி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தருவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நோயாளிகள் இனி, உடனுக்குடன் துல்லிய முடிவுகளை அறிந்து, உயர் சிகிச்சை தாமதமின்றி பெற முடியும்.

பொதுவாக, பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். அவ்வகையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

தினசரி புறநோயாளி பிரிவுக்கு, 1,950 பேர் வருகின்றனர். உள்நோயாளிகளாக, 45 - 65 பேர் அனுமதியாகின்றனர்; 35 - 45 குழந்தைகள் பிறக்கின்றன. 15 - 25 பேர் விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு அனுமதியாகின்றனர்.

பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதியான பின், பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் எக்ஸ்ரே, ஸ்கேன், தேவையிருப்பின் எம்.ஆர்.ஐ. எடுத்து தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கை, கால் அடிபட்டவர், நோய் வாய்ப்பட்டவர்கள், குழந்தைகளுக்கும் எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேன் தவிர்க்க முடியாததாக உள்ளது.

இத்தகைய சிகிச்சைகள் துல்லியத்தன்மையுடன் இருக்க, 'ப்ளூரோஸ்கோபி' அமைப்புடன் கூடிய டிஜிட்டல் ரேடியோகிராபி, 70 லட்சம் மதிப்பில், மருத்துவப் பணிகள் துறை உதவியுடன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தருவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி 'டீன்' மனோன்மணி கூறுகையில், ''ப்ளூரோஸ்கோபி கருவி உடலின் உள் உறுப்புகளின் இயக்கத்தை நேரடியாகக் காட்டும் நவீன எக்ஸ்ரே கருவியாகும்.

நோயறிதல் மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்கு விரிவான பயன்தரும். மாவட்டத்துக்கு ஒரு கருவி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இக்கருவி செரிமானம், சிறுநீர் பாதை மற்றும் இடைமுக சிகிச்சை பரிசோதனைகளில் முக்கிய பங்காற்றுகிறது. வழக்கமான எக்ஸ்ரே வை விட துல்லியமாக முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

நம் மருத்துவ கல்லுாரியின் கதிரியக்கவியல் சேவைகளுக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாக ப்ளூரோஸ்கோபி கருவி அமைந்துள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us