/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தவறவிட்ட பொருள் ஒப்படைப்பு; டிரைவர் - நடத்துனருக்கு பாராட்டு
/
தவறவிட்ட பொருள் ஒப்படைப்பு; டிரைவர் - நடத்துனருக்கு பாராட்டு
தவறவிட்ட பொருள் ஒப்படைப்பு; டிரைவர் - நடத்துனருக்கு பாராட்டு
தவறவிட்ட பொருள் ஒப்படைப்பு; டிரைவர் - நடத்துனருக்கு பாராட்டு
ADDED : டிச 03, 2024 11:55 PM

பல்லடம் ; பஸ்சில் தவறவிட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பாராட்ட தெரிவிக்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் நடந்தது.
திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி - பண்ணாரி செல்லும் பஸ்சில், அவிநாசி, சூளை பகுதியை சேர்ந்த ஒருவர் பயணித்தார். திருப்பூரில் இறங்கிய அவர், தனது மொபைல் போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பஸ்சில் தவறவிட்டார்.
இதனை பார்த்து, பஸ் டிரைவர் வேல்முருகன் மற்றும் நடத்துனர் ராமு ஆகியோர், பொருட்களை உரியவருக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளின், சம்பந்தப்பட்ட டிரைவர் மற்றும் நடத்துனரை பாராட்டியதுடன், இருவருக்கும் பாராட்டு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்தனர்.
பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மண்டல பொது மேலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். துணை மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் செந்தில், திருப்பூர் மண்டல தொ.மு.ச., பொருளாளர் சின்ன கண்ணன், பல்லடம் கிளை செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். முன்னதாக, பயணியிடம் பொருட்களை ஒப்படைத்த நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.