sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சமத்துவபுர மேம்பாடு திட்டம் செயல்படுத்த கோரிக்கை

/

சமத்துவபுர மேம்பாடு திட்டம் செயல்படுத்த கோரிக்கை

சமத்துவபுர மேம்பாடு திட்டம் செயல்படுத்த கோரிக்கை

சமத்துவபுர மேம்பாடு திட்டம் செயல்படுத்த கோரிக்கை


ADDED : ஜன 07, 2025 02:03 AM

Google News

ADDED : ஜன 07, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; சமத்துவபுர குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்தில், கோட்டமங்கலம் குடியிருப்பை சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலத்தில், கடந்த, 2010ல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. இங்கு, 100 வீடுகள் கட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

குடியிருப்பு கட்டும் போதே, வடக்கு பகுதியில், மழை நீர் உள்ளே வராமல் தடுக்க, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.

தொடர்ந்து, இக்குடியிருப்பில் பிற மேம்பாட்டு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் இல்லாமல் பல்வேறு பிரச்னைகளை குடியிருப்பு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதே போல், முன்பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவும் பொலிவிழந்து விட்டது. பூங்காவில், முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு சாதனங்கள் உடைந்து, குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. பிற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு சமத்துவபுர குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்தது. பாலப்பம்பட்டி உள்ளிட்ட சமத்துவபுரங்கள் இத்திட்டத்தில், சேர்க்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், கோட்டமங்கலம் குடியிருப்பு கண்டுகொள்ளப்படவில்லை. இந்தாண்டு, இக்குடியிருப்பு மேம்பாட்டுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us