sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

/

வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : ஜூன் 21, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை நகர வணிக வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை நகரில், பசுபதி வீதி, சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. இந்த பகுதிகள், நகரின் மையமாகவும் இருப்பதால், பிரதானமான வழித்தடமாகவும் உள்ளன.

நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் அப்பகுதிகளை கடந்து செல்கின்றனர். தற்போது வணிக கடைகளின் ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் தொடர்ந்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்கள் நிறுத்துவதற்கு ரோட்டோரத்தில் விடப்பட்டுள்ள இடைவெளியை, பல வணிக கடைகளில், பொருட்களை வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால், வாகன ஓட்டுனர்கள் ரோட்டை மறித்து வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி, ரோட்டை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us