ADDED : அக் 16, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாவட்ட வருவாய்த்துறையில், துணை தாசில்தார் பொறுப்பு வகித்து வந்தவர்களில், 16 பேரை, மாவட்டத்தின் வெவ்வேறு அலுவலகம் மற்றும் பிரிவுகளுக்கு, பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் மனீஷ் நாரணவரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், வழங்கல் துறை, நிலம் எடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை வருவாய் ஆய்வாளர், உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்து, 30 பேர் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.