sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் செல்ல தடை

/

பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் செல்ல தடை

பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் செல்ல தடை

பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் செல்ல தடை


ADDED : டிச 31, 2024 06:42 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், கனமழை பெய்து வருகிறது.

மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி, பக்தர்கள், சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டு, வழித்தடம் அடைக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மலையடிவாரத்தில், தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us