ADDED : செப் 05, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; பழநி-கொழுமம்-குமரலிங்கம்-குறிச்சிக்கோட்டை-எரிசனம்பட்டி வழியாக ஆனைமலை செல்லும் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.
பல்வேறு பகுதிகளில் இருந்து பழநிக்கும் வரும் பக்தர்கள், கொழுமம், குமரலிங்கத்திலுள்ள பழமையான கோவில்களுக்கும், திருமூர்த்திமலை கோவிலுக்கு சென்று விட்டு, மாசாணியம்மன் கோவிலுக்கு செல்கின்றனர். பழநியில் இருந்து ஆனைமலை செல்லும் இந்த ரோடு பல இடங்களில் குறுகலாக உள்ளது. இந்த ரோட்டை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.