sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கதித்தமலையில் தேரோட்டம்; முருக பக்தர்கள் பரவசம்

/

கதித்தமலையில் தேரோட்டம்; முருக பக்தர்கள் பரவசம்

கதித்தமலையில் தேரோட்டம்; முருக பக்தர்கள் பரவசம்

கதித்தமலையில் தேரோட்டம்; முருக பக்தர்கள் பரவசம்


ADDED : பிப் 15, 2025 07:13 AM

Google News

ADDED : பிப் 15, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கதித்தமலை ஸ்ரீவெற்றிவேலாயுதசாமி கோவிலில் நேற்று, மலை மீது தேரோட்டம் நடந்தது; பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க தேர் இழுத்தனர்.

திருப்பூர் அருகே ஊத்துக்குளி, கதித்தமலை ஸ்ரீவெற்றி வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா விமரிசையாக நடந்தது. கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை, சுவாமி திருவீதியுலா நடந்தது. தைப்பூச நாளில், அடிவாரத்தில் உள்ள தேரோட்டம் நடந்தது. அடுத்த நாள், தெப்பத்தேர் உற்சவம் நடந்தது.

நேற்று, மலை மீது தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, காலை தேரில் எழுந்தருளினார்; தொடர்ந்து, மலையை சுற்றி வந்து தேரோட்டம் நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'கந்தனுக்கு அரோகரா' கோஷம் முழங்க, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நிலையை அடைந்ததும் மகா தீபாராதனை நடந்தது; இன்று மஞ்சள் நீர் விழா நடக்க உள்ளது.

 காங்கயம், சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவில் தேர்த்திருவிழாவில், ஏராளமான பெண்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர்வீதிகளில் அமர்ந்து, தலைவாழை இலையில் அரிசி, பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபட்டனர்.

சென்னியாண்டவர் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமிகோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், இன்று மஞ்சள் நீர் விழாவுடன், தைப்பூச தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us