sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசி கோவிலில் பக்தர்கள் கடும் அவதி

/

அவிநாசி கோவிலில் பக்தர்கள் கடும் அவதி

அவிநாசி கோவிலில் பக்தர்கள் கடும் அவதி

அவிநாசி கோவிலில் பக்தர்கள் கடும் அவதி


ADDED : ஜன 02, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டு என்பதால், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவர் என்பது தெரிந்தும், போதுமான வசதிகளை செய்யவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

குறிப்பக, பொது தரிசனத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள், நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், குழந்தைகள் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பக்தர்களின் வரிசைகளை ஒழுங்குபடுத்த கோவில் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us