/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திப்ரூகர் சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்கும்
/
திப்ரூகர் சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்கும்
ADDED : பிப் 13, 2024 01:11 AM
திருப்பூர்;பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, கன்னியாகுமரி -- திப்ரூகர் (அசாம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வரும், 17ம் தேதி மாலை, 5:25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06103) திங்கள் இரவு, 8:50 மணிக்கு திப்ரூகர் சென்று சேரும். சனிக்கிழமை அதிகாலை, 4:58 மணிக்கு திருப்பூர் வரும்; மார்ச், 1, 15, 29 தேதிகளிலும் இந்த ரயில் இயங்கும்.
மறுமார்க்கமாக, வரும், 21ம் தேதி புதன்கிழமை இரவு, 7:55 மணிக்கு திப்ரூகரில் புறப்படும் ரயில், வெள்ளி இரவு, 8:55 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.
திருப்பூருக்கு சனிக்கிழமை காலை, 9:43 மணிக்கு வரும். மார்ச், 6, 20 மற்றும் ஏப்ரல், 3ம் தேதிகளிலும் இந்த ரயில் இயங்கும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருவதாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.