/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; அனுகிரஹா பள்ளி மாணவர்கள் 'பட் பட்' பதில்
/
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; அனுகிரஹா பள்ளி மாணவர்கள் 'பட் பட்' பதில்
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; அனுகிரஹா பள்ளி மாணவர்கள் 'பட் பட்' பதில்
'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; அனுகிரஹா பள்ளி மாணவர்கள் 'பட் பட்' பதில்
ADDED : டிச 03, 2024 06:21 AM

உடுமலை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி - வினா போட்டி, துங்காவி அனுகிரஹா சர்வதேச பள்ளியில் நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் 'மெகா வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், துங்காவி அனுகிரஹா சர்வதேசப் பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.
நேற்று பள்ளியில் நடந்த இப்போட்டியில், முதல் சுற்றில், 483 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'ஏ' அணியைச்சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர் மிர்னல்கிருஷ்ணா, ஒன்பதாம் வகுப்பு மாணவி சிவானிகா ஆகியோர் வென்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் செல்வநாயகி,பள்ளி ஒருங்கிணைப்பாளர் சிவகார்த்திகேயன், பட்டம் ஒருங்கிணைப்பாளர் சரண்யா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.
ஈர்க்கும் பட்டம்
பள்ளி முதல்வர் செல்வநாயகி கூறியதாவது: மாணவர்கள் எளிதில் தமிழில் வாசிப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில் பட்டம் உள்ளது. மாணவர்களின் பெற்றோரும் ஆர்வத்துடன் பட்டாம் இதழ் வாசிக்கின்றனர். இந்த பட்டம் இதழில் பலவிதமான போட்டிகள், வாசிப்புக்கான பகுதி, வண்ண பகுதிகளாக இருப்பது மாணவர்களை அதிகம் கவர்கின்றது. பட்டம் வாசிப்பதால், மற்ற நுால்களையும் வாசிக்கும் ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
இவ்வாறு கூறினார்.