sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; என்.வி., மெட்ரிக் மாணவர்கள் 'பட் பட்' பதில்

/

'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; என்.வி., மெட்ரிக் மாணவர்கள் 'பட் பட்' பதில்

'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; என்.வி., மெட்ரிக் மாணவர்கள் 'பட் பட்' பதில்

'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி; என்.வி., மெட்ரிக் மாணவர்கள் 'பட் பட்' பதில்


ADDED : நவ 12, 2024 05:38 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்புக்கான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி-வினா போட்டி, பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் 'மெகா வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான வினாடி-வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.

நேற்று பள்ளியில் நடந்த இப்போட்டியில், முதல் சுற்றில், 130 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.

மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'ஜி' அணியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர்கள் தமிழ்செல்வன், அக் ஷயகுமார் ஆகியோர் வென்றனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் அன்னபூரணி, ஒருங்கிணைப்பாளர் சக்திவேலு, பள்ளி ஆசிரியர்கள் நளினி, கிருபாநந்தினி பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும்.

திறனை மேம்படுத்துகிறது


பள்ளி முதல்வர் அன்னபூரணி கூறியதாவது:

மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையிலும், பொதுத்திறனை துாண்டும் வகையிலும் பட்டம் இதழ் உள்ளது. எளிய முறையில் கணிதம் கற்க உதவுகிறது. புத்தகங்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

மாணவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. போட்டி திறன்களையும், சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கூறினார்.

வாசிப்பதற்கு எளிமை


மாணவர் தமிழ்செல்வன்: எந்தவித தங்கு தடையில்லாமல் தமிழில் வாசிப்பதற்கான திறனை வளர்க்கும் வகையில் பட்டம் உள்ளது. பட்டம் இதழில், ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகளை படிப்பதற்கு ஆர்வம் ஏற்படுகிறது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான போட்டி மனபான்மையை ஊக்குவிக்கிறது.

எளிமையாக உள்ளது


மாணவர் அக் ஷயகுமார்: பட்டம் இதழ் நம்மை சுற்றி நடக்கும் நாட்டு நடப்புகள், புதிதாக வரும் கண்டுபிடிப்புகள், விளையாட்டு போட்டிகளின் அப் டூ டேட் தகவல்கள், விஞ்ஞானம், அறிவியல், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து கருத்துகளையும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.






      Dinamalar
      Follow us