sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலவச ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு வாங்கிய நான்கு ஆடுகள் திடீர் பலி : பயனாளி கவலை

/

இலவச ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு வாங்கிய நான்கு ஆடுகள் திடீர் பலி : பயனாளி கவலை

இலவச ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு வாங்கிய நான்கு ஆடுகள் திடீர் பலி : பயனாளி கவலை

இலவச ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு வாங்கிய நான்கு ஆடுகள் திடீர் பலி : பயனாளி கவலை


ADDED : செப் 16, 2011 11:33 PM

Google News

ADDED : செப் 16, 2011 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : அரசின் இலவச ஆடு வளர்ப்பு திட்டத்திற்காக வாங்கப்பட்ட ஆடுகளில் நான்கு திடீரென இறந்ததால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கால்நடை துறையினர் மீது அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார். தமிழக அரசு ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பகுதியில் 159 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆடுகள் வழங்க மூலனூர் கன்னிவாடி, முத்தூர் பகுதிகளிலுள்ள சந்தைகளில் ஆடுகள் வாங்கப்பட்டன கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள், ஆடுகளை பராமரித்து வந்தனர். இதில்,உடுமலை போடிபட்டியை சேர்ந்த பத்மா, போடிபட்டி காமராஜ் நகரை சேர்ந்த தெய்வநாயகி, கருப்பாத்தாள், வேலம்மாள் ஆகிய பயனாளிகளுக்கு வாங்கிய ஆடுகளில் தலா ஒன்று வீதம் நான்கு ஆடுகள் நேற்று முன்தினம் இரவு இறந்தன. வாழ்வாதாரத்தை மேம்படுத்த பலத்த எதிர்பார்ப்புகளுடன் வாங்கி வரப்பட்ட ஆடுகள் இறந்தது வேதனையளிப்பதாகவும், ஆடுகள் பராமரிப்பில் கால்நடை துறையினர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பயனாளிகளுக்கு ஆடுகள் தேர்வு செய்யப்பட்டு, கோவை நோய் புலனாய்வு பிரிவு மூலமாக ஆடுகள் ஆய்வு செய்யப்பட்ட பின் குடற்புழு நீக்கம் மருந்து அளிக்கப்பட்டது. தினசரி நான்கு டாக்டர்கள் கொண்ட குழு மூலமாக சிகிச்சையும் வழங்கப்

பட்டது. கொள்முதல் செய்து வந்த ஆடுகளில், நான்கு ஆடுகள் இறந்ததற்கு தட்ப வெப்பநிலை காரணமாக இருக்க கூடும். இறந்த ஆடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளதால், பயனாளிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும் என்றனர். அமைச்சர் அதிருப்தி : இந்நிலையில், உடுமலை அருகே நேற்று நடந்த ஆடு வழங்கும் விழாவில் பங்கேற்ற ஊரக தொழிற்துறை அமைச்சர் சண்முகவேலு; கால்நடைத்துறை அதிகாரிகளிடம், ' ஆடுகள் இறந்து விட்டதாக பயனாளிகள் தெரிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது.; ஆய்வு செய்து ஆடுகளை வாங்கவில்லையா', என கால்நடைதுறையினரிடம் அதிருப்தி தெரிவித்தார். இதனால், இலவச ஆடு வழங்கும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us