/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்
/
மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்
மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்
மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்
ADDED : செப் 29, 2011 10:05 PM
திருப்பூர் : மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் இறகுப்பந்து போட்டி,
திருப்பூர் மாவட்ட பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பில், ராயபுரம் ஆல்பின்
கிளப்பில் நடந்தது.இறுதி போட்டி நேற்று நடந்தது.
ஜூனியர் ஆண்கள் பிரிவு
ஒற்றையர் ஆட்டத்தில் விருதுநகர் அணியின் சுதர்சன், மதுரை அணியின்
சூர்யபிரகாஷ் களமிறங்கினர்; முதல் சுற்று ஆட்டத்தில் 21-13 புள்ளிகள்;
இரண்டாவது சுற்றில் 21-15 புள்ளிகள் பெற்று விருதுநகர் அணி முன்னிலை
வகித்தது.இரட்டையர் பிரிவில் சுதர்சன், அசோக்குமார் ஜோடி - சூர்யபிரகாஷ்,
யஸ்வந்த் ஜோடியை எதிர்கொண்டு ஆடியது. முதல் சுற்றில் 23-21; இரண்டாம்
சுற்றில் 20-22; மூன்றாவது சுற்றில் 21- 16 புள்ளிகள் பெற்று சுதர்சன்,
அசோக்குமார் ஜோடி வெற்றி பெற்றது; ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில்
2-0 என்ற செட் கணக்கில் விருதுநகர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை
கைப்பற்றியது. ஜூனியர் பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் கோவை அணியை
சென்னை அணி எதிர்கொண்டது. கோவை அணி சார்பில் ஆதித் அனந்தா - மதுரை அணி
சார்பில் சுருதி ஆடினர். முதல் சுற்று ஆட்டத்தில் 21-10; இரண்டாவது
சுற்றில் 21-16 புள்ளிகள் பெற்று கோவை அணி முன்னிலை வகித்தது. இரட்டையர்
பிரிவு ஆட்டத்தில், கோவை ஆதித் அனந்தா, விகாசினி ஜோடி - சென்னையின்
நிக்கிதா, சுருதி ஜோடியை எதிர்கொண்டு ஆடியது; முதல் சுற்று ஆட்டத்தில்,
21-4; இரண்டாவது சுற்றில் 21-9 புள்ளிகள் பெற்று கோவை அணி 2-0 என்ற செட்
கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.