ADDED : செப் 18, 2011 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அறிவுத்திருக்கோவிலில், காய கல்ப பயிற்சி நடந்தது.உடுமலை தளி ரோட்டிலுள்ள அறிவுத்திருக்கோவிலில், மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியினை சிறுமுகை பேராசிரியர் ராமலிங்கம் அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பொன்னுசாமி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.