ADDED : ஆக 11, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள பாலவிகாஸ் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் வெங்கடேஷ், மாவட்ட மகிளா அணி பொறுப்பாளர் விஜயலட்சுமி மற்றும் குழுவினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்தனர். இதில், பாலவி காஸ் பள்ளி மாணவர்கள், பாலவிகாஸ் ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் மற்றும் சத்ய சாய் சேவா அமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.