sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கலை கல்லுாரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

/

அரசு கலை கல்லுாரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

அரசு கலை கல்லுாரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

அரசு கலை கல்லுாரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை


ADDED : செப் 23, 2025 06:00 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வீரர்கள் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் கால மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் நவீந்திரன் தலைமையில், நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், கவச உடை அணிந்து பெரும் தீ விபத்தில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, நச்சுப்புகை ஏற்படும் தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உடைய அணிந்து காப்பாற்றுவது, வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டரை கையாளும் முறை உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் மாணவர்கள் முன் நடத்தி காட்டப்பட்டது.

இதுதவிர, அலுவலகங்கள், வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பானை உபயோகிப்பது குறித்து மாணவிகளை வைத்து ஒத்திகை காட்டப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி எண்களாக 100, 101, 108 மற்றும் 112 குறித்து எந்தெந்த எண்களில் அழைத்தால் எந்தெந்த துறை உடனடியாக பதிலளிக்கும் என்பதை விளக்கினர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் முனைவர் ஹேமலதா (பொறுப்பு) முன்னிலை வகித்தார். கல்லுாரி பேரிடர் மேலாண்மை குழு முனைவர் மணிவண்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us