sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

/

வரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

வரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

வரி செலுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


ADDED : பிப் 24, 2024 12:16 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையில் உள்ள கட்டடங்களில் குடிநீர் குழாய் துண்டிப்பு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் வரி வசூல் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரியினங்கள் நீண்ட காலம் நிலுவையில் உள்ள கட்டடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வகையில், நேற்று ஒரே நாளில், 2வது மண்டலத்தில், 17 இடங்களில் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. ராஜா நகர், லக்கி நகர், காட்டன் மில் ரோடு, பவானிநகர், ரங்கநாதபுரம், லட்சுமி நகர், கே.ஜி., லேஅவுட், ராஜமாதா நகர் மற்றும் கருணாகரபுரி ஆகிய பகுதிகளில் நீண்ட நாளாக வரியினங்கள் நிலுவை வைத்து, நோட்டீஸ் வழங்கியும், வரி செலுத்தாத, 17 இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

வரியினங்கள் நிலுவையில் வைத்துள்ள கட்டடங்களில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தொடரும். நிர்வாகத்துக்கு ஒத்துழைக்கும் வகையில், வரியினங்களை நிலுவையின்றி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us