/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீமை இலந்தை நாற்றுகள் வினியோகம்
/
சீமை இலந்தை நாற்றுகள் வினியோகம்
ADDED : நவ 27, 2024 09:17 PM

உடுமலை; வறட்சியான பகுதிகளில் பயிரிடுவதற்கு ஏற்ற, சீமை இலந்தை நாற்றுகள் தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்தில் வினியோகிக்கப்படுகிறது.
இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி கூறியதாவது:
சீமை இலந்தை வறட்சி மற்றும் உவர் நிலங்களில் பயிரிடுவதற்கு ஏற்ற ரகமாகும். நடவுக்கு 8 மீ., இடைவெளியில் ஒரு மீட்டர் ஆழம், அகலம் மற்றும் நீளமாக குழிகள் எடுத்து ஆறவிட்ட பிறகு, 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல்மண்ணால் குழிகளை நிரப்பலாம்.
நடவுக்கு பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மானாவாரியாக பயிரிடப்படும் இலந்தை மரங்களுக்கு தேவையான நீரை தேக்குவதற்கு சாய்வு பாத்திகளை பெரிதாக அமைக்க வேண்டும். சீமை இலந்தை ரகம் இரண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு முதல் காய்க்க துவங்கும்.
ஆண்டுக்கு 70 முதல் 80 கிலோ வரை மகசூல் கிடைக்கும். தேசிய தோட்டக்கலை இயக்கத்தில், உடுமலை வட்டாரத்தில், 0.5 ெஹக்டேர் இலந்தை பரப்பு விரிவாக்கம் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது. மானியத்தில் இதற்கான நாற்றுகள் வினியோகிக்கப்படும்.
தேவைப்படும் உடுமலை வட்டார விவசாயிகள், தோட்டக்கலை உதவி இயக்குநர் கலாமணி-98429 50674, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சிங்காரவேல் 95247 27052; சித்தேஸ்வரன் 88836 10449, ராஜமோகன் 95854 24502 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.