/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட தடகள போட்டி; அரசு பள்ளி மாணவர் வெற்றி
/
மாவட்ட தடகள போட்டி; அரசு பள்ளி மாணவர் வெற்றி
ADDED : நவ 05, 2024 08:51 PM
உடுமலை ; பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நடந்த, மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.
பள்ளிகல்வித்துறையின் சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்ட அளவில் தடகளப்போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கான மும்முறை தாண்டுதல் சீனியர் பிரிவு போட்டியில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த கோகுல், முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவருக்கு, பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.