ADDED : அக் 12, 2025 10:29 PM

உடுமலை; உடுமலையில் திருப்பூர் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பம் சங்கம் சார்பில், 5வது மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது.
இளைஞர்கள், சிறுவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பகத்சிங் சிலம்பம்ம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் சேரிட்டபிள் டிரஸ்ட், திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்பம்ச்சங்கம் மற்றும் லெப்ட்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக்கட்டளை சார்பில் இப்போட்டிகள் உடுமலையில் நடந்தது.
பகத்சிங் சிலம்பம்ம் களரி மார்ஷியல் அறக்கட்டளை நிறுவனர் ஆசான் வீரமணி வரவேற்றார். நெடுங்கம்பு, இரட்டைக்கம்பு, தொடும் முறை களரி சுவடுகள், கெட்டிக்கேறி மெய் பயட்டு; வாளும் கேடயமும் உறுமி வீசல் போன்ற போட்டிகள் நடந்தது.
ஜூனியர் சப்- ஜூனியர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சைலாத் சிலம்பம் சங்கம், பகத்சிங் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை பயிற்சியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.